திருச்சி மாநாட்டில் தமுஎகச தலைவர் சு.வெங்கடேசன் பேசியது: புதிய கல்விக் கொள்கையை தொடக்கத்திலி ருந்தே எதிர்க்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்திலிருந்து ஏன் இவ்வ ளவு எதிர்ப்பு வருகின்றது என்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு கால தமிழ் மரபு இதைப் பார்த்து சும்மா இருக்காது. அதிகாரத்திற்கு எதிராக கல்வியை உயர்த்திப் பிடித்த மண் தமிழ் நாடு. நாடாளுமன் றத்தில் திட்டமிட்டு ஆங்கிலம்அழிக் கப்படுகிறது. அமைச் சர்கள் முழுக்க, முழுக்க இந்தியில் தான் பேசுகின்ற னர். நாங்கள் ஆங் கிலத்தில்பேசுங் கள் என்றால்அதை எதிர்த்து பிஜேபி எம்பிக்கள் கத்துகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் அடைந்த கல்வியை, பலனை பறிக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். மாநில உரிமைகள் அனைத்தை யும் பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி யுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப் பட்டால் மாநில கல்வி அமைச்சர்களுக்கு எந்த அதி காரமும் இருக்கப் போவதில்லை. நமது கல்வி அவர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர் அல்ல. அவர்கள் பறிப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். எழுத்துக்களின் தாயகம் தமிழகம். கல்வி எங்கள் பிறப்புரிமை. அதை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம் என்றார்.